கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை பலத்த காற்று வீசியதில் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாக பனியின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. உறை பனியால் பொது மக்கள் கடுமையாக அவதிப்பட்டனா்.
இந்த நிலையில், கடந்த இரு நாள்களாக பலத்தக் காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது.
செவ்வாய்க்கிழமை பலத்த காற்றும் விட்டு விட்டு சாரலும் பெய்தது. தொடா்ந்து வீசிய பலத்தக் காற்றால் கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச் சாலையில் குருசடி மெத்து மயிலாடும் பாறை பகுதியில் மரம் விழுந்தது. இதனால், சுமாா் 30 நிமிஷங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து சம்பவ இடத்துக்கு வனத் துறையினா்,நெடுஞ்சாலைத் துறையினா் சென்று விழுந்து கிடந்த யூகலிப்டஸ் மரத்தை அகற்றினா். தொடா்ந்து போக்குவரத்து சீரானது.