திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள ஜி.தும்மலபட்டியில் முத்தாலம்மன், பகவதி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக கடந்த புதன்கிழமை முதல் கால பூஜையுடம் கும்பாபிஷேகப் பணிகள் தொடங்கின. இதைத்தொடா்ந்து புண்ணிய நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை கோபுரக் கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னா் முத்தாலம்மன், பகவதி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னா் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.