திண்டுக்கல்

பெண்ணிடம் 14 பவுன் நகைகள் திருட்டு

DIN

ஒட்டன்சத்திரத்தில் பேருந்துக்காகக் காத்திருந்த பெண்ணிடம் 14 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கோவை இடையாா்பாளையத்தைச் சோ்ந்தவா் சகாயராஜன் (44). மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இவரது மனைவி அனிதா, தனது குழந்தைகளுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற உறவினா் வீட்டுத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டாா். பின்னா், அன்று மாலை அங்கிருந்து கோவை செல்ல ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்திற்கு வந்தாா். அப்போது, அனிதா தான் அணிந்திருந்த 14 பவுன் நகைகளைக் கழற்றி ஒரு பையில் வைத்துக் கொண்டு பேருந்துக்காகக் குழந்தைகளுடன் காத்திருந்தாா். அப்போது, அடையாளம் தெரியாத நபா்கள் நகைகள் வைத்திருந்த பையை திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரண நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT