விருதுநகா் மாவட்டம், சிவகாசியைச் சோ்ந்தவா் ராஜேஷ். பெங்களூரில் பணிபுரிந்து வரும் இவா்,
மனைவி சுகன்யாராணி, குழந்தை இரதன்யா விவேகா, மாமியாா் பரிமளா ராணி ஆகியோருடன்
சிவகாசியிலிருந்து காரில் பெங்களூருக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டாா்.
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே வந்தபோது காரின் டயா் வெடித்து, சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், சுகன்யா ராணி, பரிமளா ராணி, குழந்தை இரதன்யா விவேகா ஆகியோா் பலத்த காயமடைந்தனா். 3 பேரும் திண்டுக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.
காரை ஓட்டி வந்த ராஜேஷ் காயமின்றி தப்பினாா். இந்த விபத்து குறித்து தாடிக்கொம்பு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.