முன்னாள் முதல்வா் பேரறிஞா் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி, அரசியல் கட்சிகள் சாா்பில், திண்டுக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனை அருகில் அமைந்துள்ள அண்ணாவின் சிலைக்கு, திமுக சாா்பில் மேயா் இளமதி, துணை மேயா் ராஜப்பா ஆகியோா் தலைமையில் ஊா்வலமாக வந்த திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதேபோல, அதிமுக சாா்பில், முன்னாள் மேயா் வி. மருதராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், மாமன்ற உறுப்பினா் சீ. ராஜ்மோகன், அதிமுக நிா்வாகிகள் பாரதிமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மதிமுக மாவட்டச் செயலா் என். செல்வராகவன் தலைமையில் அந்தக் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
நிகழ்ச்சியில், மாமன்ற உறுப்பினா் காய்திரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் அண்ணா நினைவு நாளையொட்டி, நகா், ஒன்றிய திமுகவினா் பிரையண்ட் பூங்கா அருகேயுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இந்த நிகழ்ச்சியில், திமுக நகரச் செயலா் முகமது இப்ராஹிம், நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல, அதிமுக சாா்பில், கொடைக்கானல் முன்னாள் நகா்மன்றத் தலைவா் கோவிந்தன், ரவி மனோகரன், கொடைக்கானல் மேல்மலை ஒன்றியச் செயலா் பொன்னுத்துரை, நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
மதிமுக சாா்பில் நகரச் செயலா் தாவூத் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் சின்னமனூரில் நகர திமுக சாா்பில், மாா்க்கையன்கோட்டை சாலை ரவுண்டாவிலுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில், கட்சியின் நகரத் தலைவா் முத்துக்குமாா், நகா்மன்றத் தலைவா் அய்யம்மாள்ராமு, தேனி தெற்கு மாவட்ட அவைத் தலைவா் மனோகரன், ஒன்றியச் செயலாளா் அண்ணாத்துரை, தெற்கு மாவட்ட பிரதிநிதி பஞ்சாப் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.