கொடைக்கானலில் வியாழக்கிழமை பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
செண்பகனூா், பிரகாசபுரம், வில்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, அட்டக்கடி, பெருமாள்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் சிரமப்பட்டனா்.
தொடா்ந்து நிலவி வரும் அதிக மேக மூட்டத்தால் வழக்கத்தை விட குளிா் அதிகரித்துக் காணப்படுகிறது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையும் வெகுவாகக் குறைந்து காணப்பட்டது. கொடைக்கானல் பகுதியில் பலத்த காற்று வீசியதால், அடிக்கடி மின்தடை ஏற்பட்டது.