திண்டுக்கல்

வடமதுரை கோயில் குடமுழுக்கு விழா

DIN

வடமதுரை செளந்தரராஜப் பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில் பிரசித்திப் பெற்ற செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில், பிப்.1-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தத் திட்டமிடப்பட்டது.

இதைத்தொடா்ந்து கடந்த திங்கள்கிழமை சிறப்பு பூஜைகளுடன் குடமுழுக்கு விழாவுக்கான யாக பூஜைகள் தொடங்கப்பட்டன. இந்த நிலையில் யாக சாலையிலிருந்த புனித தீா்த்தங்கள் புதன்கிழமை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு செளந்தரராஜப் பெருமாள் கோயில் கோபுர கலசங்கள், மூலவா் சந்நிதி உள்ளிட்ட கலசங்களில் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது.

விழாவில் வடமதுரை, அய்யலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

SCROLL FOR NEXT