திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த, சித்தா்கள் நத்தம் துணை மின் நிலையத்தில் வருகிற வியாழக்கிழமை (பிப்.2) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
இதனால், சிலுக்குவாா்பட்டி, சித்தா்கள் நத்தம், சிறுநாயக்கன்பட்டி, நூத்துலாபுரம், அம்மாபட்டி, மைக்கேல்பாளையம் அணைப்பட்டி, குண்டலப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இதை மின் வாரிய செயற்பொறியாளா் கருப்பையா தெரிவித்தாா்.