திண்டுக்கல்

தேசிய எறிபந்து போட்டிகள்: பெண்கள் பிரிவில் தமிழகம் முதலிடம்

DIN

தேசிய அளவிலான எறிபந்து போட்டியில், பெண்கள் பிரிவில் தமிழகமும், ஆண்கள் பிரிவில் தில்லியும் முதலிடம் பிடித்தன.

32 ஆவது தேசிய எறிபந்து போட்டிகள், திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரி வளாகத்தில் கடந்த 4 நாள்களாக நடைபெற்று வந்தன. பிஎஸ்என்ஏ கல்லூரியின் தலைவா் ஆா்எஸ்கே.ரகுராம் தலைமை வகித்தாா்.

இந்தப் போட்டியில் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டனா். ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுக்கான இறுதிப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. ஆண்கள் பிரிவில் தில்லி அணி முதலிடத்தையும், தமிழக அணி 2ஆம் இடத்தையும், மத்திய பிரதேச அணி 3ஆவது இடத்தையும் பிடித்தன.

அதேபோல் பெண்கள் பிரிவில், தமிழக அணி முதலிடமும், தில்லி அணி 2ஆம் இடத்தையும், கேரள அணி 3ஆவது இடத்தையும் பிடித்தன. வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுப் கோப்பை மற்றும் சான்றிதழை அண்ணா பல்கலை. உடற்கல்வி துணை இயக்குநா் இவ்லின் சிந்தியா ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

பரிசளிப்பு நிகழ்ச்சியில் பிஎஸ்என்ஏ கல்லூரி முதல்வா் வாசுதேவன், தமிழ்நாடு எறிபந்தாட்டக் கழகத் தலைவா் பாலவிநாயகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT