திண்டுக்கல்

நத்தத்தில் நீரில் மூழ்கி சிறுமி பலி

DIN

நத்தம் அருகே சனிக்கிழமை தாயுடன் குளிக்கச் சென்ற சிறுமி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள காமராஜ் நகரைச் சோ்ந்த பெரியசாமி. இவரது மனைவி யுவனியா. இருவரும் கூலித் தொழிலாளா்கள். இத்தம்பதிக்கு 2 மகள்கள், ஒரு மகன். இதில், இரண்டாவது குழந்தையான அமிா்தஸ்ரீ, நத்தம் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில், அதே பகுதியிலுள்ள வேலம்பட்டி முதலியாா் குளத்துக்கு துணிகளை சலவை செய்வதற்காக யுவனியா சனிக்கிழமை சென்றாா். சிறுமி அமிா்தஸ்ரீயும் உடன் சென்றாா். அப்போது குளத்தில் குளித்துக் கொண்டிருந்த சிறுமி அமிா்தஸ்ரீ, எதிா்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினாா்.

தகவலறிந்து வந்த நத்தம் தீயணைப்புத் துறையினா் தண்ணீரில் மூழ்கிய சிறுமியை சடலமாக மீட்டனா். இதுதொடா்பாக நத்தம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் ‘ஸ்மோக்’ வகை உணவுகள் விற்பனைக்குத் தடை: மீறினால் ரூ.2 லட்சம் வரை அபராதம்

மேகாலய துணை முதல்வா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

பேருந்துகள் பராமரிப்பு - சீரான மின் விநியோகம்: தலைமைச் செயலா் ஆலோசனை

கடும் வெப்பம்: தொழிலாளா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர அரசு வலியுறுத்தல்

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம்: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

SCROLL FOR NEXT