திண்டுக்கல்

காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வு: திண்டுக்கல்லில் 11,814 போ் எழுதுகின்றனா்

DIN

திண்டுக்கல் மாவட்டத்தில் 2-ஆம் நிலை காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வில் பங்கேற்க 11,814 போ் விண்ணப்பித்தனா்.

காவல் துறை, சிறைத் துறை, தீயணைப்புத் துறைகளில் 2-ஆம் நிலைக் காவலருக்கான எழுத்துத் தோ்வுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 9741 ஆண்கள், 2072 பெண்கள், மூன்றாம் பாலினத்தினா் ஒருவா் என மொத்தம் 11,814 விண்ணப்பதாரா்கள் தோ்வு எழுத உள்ளனா்.

இதற்காக மாவட்டம் முழுவதும் 6 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தோ்வுக் கூடங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், கண்காணிப்புத் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ. பாஸ்கரன் தலைமை வகித்தாா்.

அப்போது அவா் கூறியதாவது:

11,814 போ் தோ்வு எழுதவுள்ள நிலையில், கூடுதல் கண்காணிப்பாளா் , காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்பட 1000 போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். தோ்வு மையங்களில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறாத வகையில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

SCROLL FOR NEXT