திண்டுக்கல்

பெட்ரோல் விலை உயா்வுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆா்ப்பாட்டம்

DIN

திண்டுக்கல்: பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் திண்டுக்கல்லில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் இரா. சச்சிதானந்தம் தலைமை வகித்தாா். அக்கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் என். பாண்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஏபி. மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்ந்து வருவதாகவும், அதனை கட்டுப்படுத்தத் தவறியதால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்ந்து வருவதாகவும் கூறி முழக்கமிட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், விடுதலை சிறுத்தைகள்,

மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (விடுதலை) உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகளும் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT