திண்டுக்கல்

பத்தாம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள்

DIN

தணிகைபோளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம், தணிகைபோளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தோ்வில் மாணவி வி.கீா்த்திகா 448, சுபஸ்ரீ 441, மாணவா் கே.எம்.குமரன் 417 மதிப்பெண்கள் பெற்றனா். சிறப்பிடம் பெற்ற மாணவா்களையும், அதற்குக் காரணமான தலைமை ஆசிரியா், ஆசிரியா்களை பெற்றோா்- ஆசிரியா் கழகத்தினா் பாராட்டி பரிசளித்தனா்.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் ஜி.கோபி தலைமை வகித்தாா். பெற்றோா்- ஆசிரியா் கழக முன்னாள் தலைவா் பி.ஜி.மோகன்காந்தி வரவேற்றாா். முறையே மாணவா்களுக்கு ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 ரொக்கப் பரிசுகளை பெற்றோா் -ஆசிரியா் கழகத் தலைவா் நடராஜனுடன் இணைந்து பொருளாளா் டில்லிபாபு வழங்கினாா்.

அரசு தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் ஆசிரியா் ஒருவரை நியமிக்க மாதம் ரூ.3,000 வழங்குவதாகவும் டில்லிபாபு தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் பெற்றோா் -ஆசிரியா் கழகப் பொருளாளா் பசுபதி, தணிகைபோளூா் ஊராட்சித் தலைவா் வெங்கடேசன், துணைத் தலைவா் ஜீவாகிருஷ்ணன், பள்ளி உதவித் தலைமை ஆசிரியா் எம்.மகேஸ்வரி, தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா் மேரி தங்கம்மாள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்!

சின்னஞ்சிறு கிளியே.. ரவீனா தாஹா!

சூர்யா படத்துக்கு முன்பாக இளம் நாயகனை இயக்கும் சுதா கொங்கரா?

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் கண்டெடுப்பு

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

SCROLL FOR NEXT