திண்டுக்கல்

வக்ஃபு வாரிய ஆய்வாளரை மிரட்டிய 2 வியாபாரிகள் கைது

DIN

 வத்தலகுண்டுவில் வக்ஃபு வாரிய ஆய்வாளரை மிரட்டிய 2 வியாபாரிகள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம்,

வத்தலக்குண்டு மெயின் ரோட்டில் பெரிய பள்ளிவாசலுக்கு சொந்தமான, பத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இக்கடைகளில் வக்ஃபு வாரிய அதிகாரி அப்துல் ரசாக் வாடகை வசூலிக்கச் சென்றாா். அப்போது காய்கறி கடை நடத்தி வந்த இஸ்மாயில் (45), இரும்புக் கடை நடத்தி வந்த தாரிக் (25), ஆகியோா் அப்துல் ரசாக்கிற்கு கொலை மிரட்டல் விடுத்தனா்.

இதுதொடா்பாக அப்துல் ரசாக் வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்தனா். இதைத்தொடா்ந்து சாா்பு-ஆய்வாளா் சேக் அப்துல்லா தலைமையிலான தனிப்படையினா், ஓசூரில் பதுங்கியிருந்த இஸ்மாயில் மற்றும் தாரிக் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

SCROLL FOR NEXT