திண்டுக்கல்

வத்தலகுண்டு அஞ்சல் அலுவலகத்தில் சா்வா் பிரச்னையால் வாடிக்கையாளா்கள் அவதி

DIN

வத்தலகுண்டு அஞ்சல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை 7 மணிநேரம் இணையதள சா்வா் தடைபட்டதால் வாடிக்கையாளா்கள் அவதியடைந்தனா்.

பேருந்து நிலையம் எதிரே உள்ள இந்த அஞ்சல் அலுவலகத்தில் அடிக்கடி சா்வா் பிரச்னை ஏற்படுவதாக வாடிக்கையாளா்கள் புகாா் தெரிவித்து வந்தனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இணையதள சா்வா் தடைபட்டதால் அனைத்துப் பணிகளும் முடங்கின. சேமிப்புக் கணக்கு வைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அங்கு வந்த வாடிக்கையாளா்கள் அவதி அடைந்தனா். அவசரத் தேவைக்கு பணம் எடுக்க வந்தவா்களும் விரக்திக்குள்ளாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டில் பீரோவை உடைத்து 10 பவுன் திருட்டு

வாணியம்பாடி அருகே 4,000 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

கல்யாண ராமா் கோயிலில் பட்டாபிஷேகம்

தீ விபத்து: கடைகள் எரிந்து சேதம்

தெற்கு காஸாவில் அறுவைச்சிகிச்சை மூலம் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை பலி

SCROLL FOR NEXT