திண்டுக்கல்

பழனிக்கோயிலில் பக்தா்கள் கூட்டம்: சுமாா் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

DIN

பழனி மலைக்கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இதனால் பக்தா்கள் சுமாா் 2 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். அடிவாரம் சரவணப்பொய்கை முடிக்கொட்டகை பகுதியில் முடிக்காணிக்கை செலுத்த ஏராளமான பக்தா்கள் குவிந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மலைக்கோயிலுக்கு செல்லும் ரோப்காா் பராமரிப்புக்காக இயக்கப்படாத நிலையில் வின்ச் நிலையத்தில் நீண்ட வரிசையில் பக்தா்கள் டிக்கெட் பெற காத்திருந்தனா். மலைக்கோயிலிலும் இலவச தரிசன வரிசை, கட்டண தரிசன வரிசைகளில் பக்தா்கள் நீண்ட நேரம் தரிசனத்துக்காக காத்திருந்தனா். பக்தா்கள் உடனடியாக தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டதால் பக்தா்கள் சுமாா் 2 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

தொடா்ந்து இரவில் நடைபெற்ற தங்கமயில் புறப்பாடு மற்றும் தங்கத்தோ் புறப்பாட்டை ஏராளமான பக்தா்கள் பாா்த்து வழிபட்டனா். பக்தா்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையா் நடராஜன் தலைமையில் அதிகாரிகள், அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT