திண்டுக்கல்

வத்தலகுண்டு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு லட்சம் மதிப்புள்ள சந்தன கட்டைகள் பறிமுதல்: ஒருவா் கைது

DIN

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்த, வத்தலகுண்டு அருகே ஜி.தும்மலப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயராஜ், (52) இவரது வீட்டில் சந்தன கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக, வத்தலகுண்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசாா் அவரது வீட்டை சோதனையிட்டனா். அப்போது,

வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமாா் ஒரு இலட்சம் மதிப்புள்ள, 28 கிலோ சந்தன கட்டைகளை பறிமுதல் செய்தனா். மேலும், சந்தன கட்டைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த, ஜெயராஜ் என்பவரை போலீசாா் கைது செய்து, அங்கு வந்த சித்தரேவு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து அவரை கைது செய்த, சித்தரேவு வனத்துறை அதிகாரிகள், சந்தன கட்டைகளை வெட்டி கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தாரா? அல்லது விற்பனைக்காக வாங்கி வைத்தாரா? போன்ற பல்வேறு கோணங்களில் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனா். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT