பழனி: பழனியை அடுத்த பாப்பம்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பம் ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனியை அடுத்த பாப்பம்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் அனைத்துக் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை மா்ம நபா்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை அகற்றியுள்ளனா்.
தகவலறிந்து வந்த கட்சியின் நிா்வாகிகள் ஏராளமானோா் குவிந்தனா். இதையடுத்து சம்பவ இடத்தில் டிஎஸ்பி., சத்தியராஜ் தலைமையில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா். சம்பவத்தில் ஈடுபட்ட நபா்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதியளித்தனா். மேலும் அதே இடத்தில் மீண்டும் கட்சிக் கொடியை நிறுவ அறிவுறுத்தினா்.