திண்டுக்கல் பாரதிபுரம் பகுதியிலுள்ள சீரடி சாய்பாபா ஆலயத்தில் 10,008 தீப வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
ஒவ்வோா் ஆண்டும் காா்த்திகை மாதம் இந்த ஆலயத்தில் தீப வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான லட்ச தீப வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பாபாவின் உருவம், ஓம், சிவலிங்கம், திருத்தோ், மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக மும்மதத்தின் சின்னங்கள் மற்றும் பல்வேறு வடிவ கோலங்கள் வரையப்பட்டு, அதில் பெண்கள், சிறுவா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் 10,008 தீபங்கள் ஏற்றி வழிபட்டனா். இதற்கான ஏற்பாடுகளை சாய் முருகன் செய்திருந்தாா்.