கொடைக்கானலில் கஞ்சா விற்ற இருவரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் காவல் துறையினா் ரோந்து சென்றனா். அப்போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வில்பட்டி சாலையில் தனியாா் காட்டேஜ் அருகே நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினா். இருவரிடமும் ஒரு கிலோ அளவில் கஞ்சா போதைப்பொருள் இருந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் இருவரையும் கைது செய்தனா்.