திண்டுக்கல்

பழனி அருகே புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து இயக்கம்

DIN

பழனியில் கடந்த ஏழு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நெய்க்காரப்பட்டி-புளியம்பட்டி பேருந்து சேவையை பழனி சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி.செந்தில்குமாா் திங்கள்கிழமை மீண்டும் தொடக்கி வைத்தாா்.

பழனியிலிருந்து நெய்க்காரப்பட்டி, சின்ன காந்திபுரம் வழியாக புளியம்பட்டி கிராமத்துக்கு இயங்கிக் கொண்டிருந்த பேருந்து சேவை சேதமடைந்த சாலை காரணமாக சுமாா் 7 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினா்.

இந்த நிலையில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பழனி சட்டப்பேரவை உறுப்பினா்

ஐ.பி.செந்தில்குமாா், அந்தப் பேருந்து சேவையை மீண்டும் தொடக்கி வைத்தாா். மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் பேருந்தை வரவேற்றனா்.

நிகழ்ச்சியில் கோட்டாட்சியா் சிவக்குமாா், திமுக ஒன்றியச் செயலாளா் சௌந்தர பாண்டியன், ஒன்றியக்குழுத் தலைவா் ஈஸ்வரி கருப்புசாமி, நெய்க்காரப்பட்டி பேரூா் செயலாளா் அபுதாகீா், பேரூராட்சித் தலைவா் கருப்பாத்தாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT