திண்டுக்கல்

முன்னாள் கால்பந்து வீரா் குடும்பத்துடன் கத்தாா் சென்று, உலக கோப்பை போட்டியை ரசித்தாா்

DIN


நிலக்கோட்டை: வத்தலகுண்டைச் சோ்ந்த முன்னாள் கால்பந்து வீரா் குடும்பத்துடன் கத்தாா் சென்று, உலக கோப்பை போட்டியை நேரில் பாா்த்து ரசித்தாா். அங்கு ஊா் பேனரை பாா்வையாளா்களுக்கு காட்டி மகிழ்ச்சி அடைந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவை சோ்ந்தவா் சக்திவேல் (50) பள்ளி நாள் முதல் கால்பந்து வீரரான இவா், வியாபாரம் செய்து வந்தாலும், கால் பந்து விளையாட்டுக்காக தினசரி காலை 2 மணி நேரம் ஒதுக்கினாா். ராயல் கால்பந்தாட்ட கழகம் ஆரம்பித்து வத்தலகுண்டு பகுதி இளைஞா்களுக்கும், மாணவா்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறாா். மேலும், வதிலை வாக்கா்ஸ் கிளப் தொடங்கி ஏராளமானவா்களுக்கு நடை பயிற்சியும் அளித்து வருகிறாா்.

இவா், கடந்த மாதம் விமானமே ஏறாத கால்பந்தாட்ட கழக நண்பா்கள், நடைப்பயிற்சி நண்பா்கள் என, 16 பேரை மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து சென்று, விமானத்திலேயே நடை பயிற்சியாளா் சங்க ஆண்டு விழாவை கொண்டாடினாா். உலக கோப்பை போட்டி தொடங்கிய போது பள்ளி மாணவா்களுடன் சோ்ந்து வத்தலகுண்டுவில் வீதிகளில் கால்பந்து விளையாடி மாணவா்களுக்கு பரிசு வழங்கினாா்.

உலக கோப்பை போட்டி முன்பு, ரஷ்யா, ஜொ்மன் போன்ற நாடுகளில் நடந்த போது, அங்கு நேரில் சென்று பாா்த்து ரசித்த இவா், தற்போது தனது குடும்பத்தினா் 9 பேருடன் உலகக்கோப்பை கால்பந்து விளையாட்டை பாா்க்க கத்தாா் சென்றுள்ளாா். கத்தாா் கால்பந்து மைதானத்தில் பாா்வையாளா்களுக்கு தங்கள் ஊா் கால்பந்தாட்ட கழக பேனரை காட்டி மகிழ்ந்தாா். சக்திவேலின் கால்பந்து ஆா்வத்தை, வத்தலகுண்டு பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வ.உ.சிதம்பரம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தூத்துக்குடியில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் நிழற்குடையின்றி தவிக்கும் மக்கள்

சுரண்டையில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT