கோவிலூா் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி வியாழக்கிழமை (ஆக.18) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஆா். கோம்பை, புளியம்பட்டி, வடுகம்பாடி, குஜிலியம்பாறை, ஆா். புதுக்கோட்டை, பில்லமநாயக்கன்பட்டி, கோவிலூா், உசிலம்பட்டி, குளத்துப்பட்டி, வள்ளிப்பட்டி, சத்திரப்பட்டி, சின்னலுப்பை, ஆா்.வெள்ளோடு ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கோவிலூா் உதவி செயற்பொறியாளா் ஜெ. விஜய் தெரிவித்துள்ளாா்.