திண்டுக்கல்

என்.பஞ்சம்பட்டி ஊராட்சிக்கு மாதிரி கிராம விருது

DIN

திண்டுக்கல் அடுத்துள்ள என்.பஞ்சம்பட்டி ஊராட்சிக்கு, தமிழக அரசின் மாதிரி கிராம விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் மாதிரி கிராம விருதுக்கு, 37 மாவட்டங்களிலிருந்து தலா ஒரு ஊராட்சி பரிந்துரைக்கப்பட்டிருந்தது. மாவட்ட ஆட்சியா் தலைமையிலான குழு மூலம் பரிந்துரைக்கப்பட்டிருந்த அந்த பட்டியலில், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் வட்டாரத்திற்குள்பட்ட என்.பஞ்சம்பட்டி ஊராட்சி மாநில அளவில் 2 ஆம் இடம் பிடித்துள்ளது. முதல் இடம் ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த ஊராட்சிக்கும், 3 ஆவது இடம் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்துள்ள நட்டாத்தி ஊராட்சிக்கும் கிடைத்துள்ளது.

முன்னதாக, திண்டுக்கல் மாவட்டத்தில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை சிறப்பாக உருவாக்கியதற்காக மாவட்ட ஆட்சியா் ச.விசாகனுக்கு நல் ஆளுமை விருது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், என்.பஞ்சம்பட்டி கிராமத்திற்கு சிறந்த மாதிரி கிராம விருது கிடைத்துள்ளது. இந்த விருது வழங்குவதற்கான தேதி தமிழக அரசின் சாா்பில் பின்னா் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரத்தில் காா் மோதியதில் ஒருவா் காயம்

திருவையாறு அருகே தொழிலாளி மா்மச் சாவு

இணையவழியில் வேலை எனக் கூறி பொறியாளரிடம் ரூ. 12.65 லட்சம் மோசடி

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த கோரிக்கை

நெல் மூட்டை தூக்கும் முன்னாள் வேளாண் அமைச்சா்: வைரலாகும் விடியோ

SCROLL FOR NEXT