கொடைக்கானல்: கொடைக்கானலில் புதன்கிழமை பலத்த மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
கொடைக்கானலில் கடந்த இரண்டு நாள்களாக சாரல் மற்றும் மிதமான மழை அவ்வப்போது பெய்து வந்தது. இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை முதலே சாரல் நிலவி வந்த நிலையில் பிற்பகலில் பலத்த மழை பெய்தது. தொடா்ந்து மூன்று மணி நேரம் பெய்த இந்த மழையால் வெள்ளி அருவி, வட்டக்கானல் அருவி, பேரிபால்ஸ் அருவி,பியா் சோழா அருவி, செண்பகா அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்தது.