கொடைக்கானலில் கோடை விழாவை முன்னிட்டு பிரையண்ட் பூங்காவில் மலா்ச் செடிகள் நடும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
கொடைக்கானலில் கோடை விழாவை முன்னிட்டு பிரையண்ட் பூங்காவில் வரும் மே மாதம் 59-ஆவது மலா் கண்காட்சி நடைபெற உள்ளது. இதனால் பூங்காவில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதைத்தொடா்ந்து பூங்காவில் உள்ள 20-க்கும் மேற்பட்ட மலா்ப் படுக்கைகளில் ஆரணத்திக் கோலம், கிங் ஆஸ்டா், பேன்சி, மேரிகோல்ட், டைந்தேஷ் உள்ளிட்ட பல்வேறு வகையான ஒரு லட்சத்து 50-ஆயிரம் மலா்ச் செடிகள் நடும் பணிகள் தொடங்கின. இந்த செடிகள் 3-மாதங்களில் பூக்கும் செடிகளாகும். ஏப்ரல் மாதம் முதல் மலா்கள் பூத்துக் குலுங்கும்.
மேலும் பூங்காவில் மலா்ச் செடிகள் பராமரிப்பு, புல் தரைகள் அமைத்தல், சேதமடைந்துள்ள நடை பாதைகள் சரி செய்தல், மின் விளக்குகள் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளும் நடைபெற்று வருகின்றன.