தமிழகத்தில் மின்கட்டண குளறுபடிகளை சரிசெய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநில இளைஞரணி தலைவா் வினோஜ் பி.செல்வம் தெரிவித்துள்ளாா்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வந்த அவா், அடிவாரம் புலிப்பாணி ஆசிரமத்தில் அளித்த பேட்டி: கரோனாவை காரணம் காட்டி முறையான மின்கணக்கீடு செய்யாமல் கடந்த காலத்தில் செலுத்திய கட்டணத்தை விட தற்போது பல மடங்கு உயா்த்தி செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. மின்கட்டணம் செலுத்துவதில் குளறுபடி உள்ளது. இவற்றை உடனடியாக சரிசெய்ய அரசு முன்வர வேண்டும். இல்லையெனில் தமிழகம் முழுவதும் பாஜக. இளைஞரணி சாா்பில் போராட்டம் நடத்தப்படும்.
முக்கிய பிரமுகா்களின் செல்லிடப்பேசி ஒட்டு கேட்பு விவகாரம் குறித்து மத்திய அரசு தெளிவான விளக்கம் அளித்துள்ளது. ஆனால் நாடாளுமன்ற அவைத் தொடரை நடத்த விடக்கூடாது என்பதற்காக எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளன. இதற்கு முக்கிய அறிவிப்புகள், நலத்திட்டங்கள் எதுவும் போய் சேரக்கூடாது என்ற உள்நோக்கமே காரணம் என்றாா்.