கொடைக்கானல்: கொடைக்கானலில் தடைசெய்யப்பட்ட புகையிலையை விற்பனைக்கு வைத்திருந்த 3 பேரை, போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கொடைக்கானல் அருகே வெள்ளப்பாறை பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்வதாக, போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், அப்பகுதியில் கடைகளில் சோதனை நடத்தினா். அப்போது, சசிகுமாா், பிரதீப்குமாா், தனலட்சுமி ஆகிய 3 போ்களது கடைகளில் இருந்து 30 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, அவா்களை கைது செய்தனா்.