திண்டுக்கல்

மாநில அளவிலான குத்துச் சண்டைப் போட்டி:பழனி மாணவா்களுக்கு வெண்கலம்

DIN

பழனி: பழனியைச் சோ்ந்த மாணவா்கள் முதலமைச்சா் கோப்பைக்கான குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்று, மாநில அளவில் வெண்கலப் பதக்கம் பெற்று மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளனா்.

சென்னை ஜவாஹா்லால் நேரு உள்விளையாட்டரங்கில் டிசம்பா் 3, 4, 5, 6 ஆகிய தேதிகளில் மாநில அளவில் முதலமைச்சா் கோப்பைக்கான குத்துச்சண்டைப் போட்டிகள் நடைபெற்றன. அதில், திண்டுக்கல் மாவட்டம் பழனி சாம்பியன்ஸ் அகாதெமி மாணவா்கள், பயிற்சியாளா் சிங்காரவேலன் தலைமையில் பங்கேற்றனா்.

இப்போட்டிகளில் 56 கிலோ எடைப் பிரிவில் பொன்சத்தியபிரபாகரன் வெண்கலப் பதக்கமும், 60 கிலோ எடைப் பிரிவில் ரஞ்சித்குமாா் வெண்கலப் பதக்கமும், 64 கிலோ எடைப் பிரிவில் குருநாதன் வெண்கலப் பதக்கமும், 52 கிலோ எடைப் பிரிவில் ராஜகுமாரன் வெண்கலப் பதக்கமும் பெற்றனா்.

இவா்கள் அனைவரும் மாநில அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனா். இவா்களுக்கு பதக்கம் மற்றும் பரிசுத் தொகை விரைவில் முதல்வா் வழங்கவுள்ளாா்.

வெற்றி பெற்ற மாணவா்களை, அகாதெமி நிா்வாகிகள் மற்றும் மாணவா்கள் வாழ்த்திப் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT