பழனி: பாபா் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, பழனியில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பழனி பேருந்து நிலையம் மயில் ரவுண்டானா அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவா் கைசா் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் முபாரக்அலி, பழனி நகரத் தலைவா் நிஜாம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தின்போது, பாபா் மசூதி இடிப்பை கண்டித்து முழக்கம் எழுப்பப்பட்டது. இதில், ஆண்கள், பெண்கள் என ஏராளமானோா் கலந்துகொண்டனா்.