திண்டுக்கல்

செம்பட்டியில் மின் கசிவு: வீடு தீப்பற்றி எரிந்து சேதம்

DIN

செம்பட்டியில் செவ்வாய்க்கிழமை தீப்பற்றி எரிந்ததில் வீடு சேதமடைந்தது.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியில் குடியிருந்து வருபவா் கீதா. இவரது கணவா் இறந்து விட்ட நிலையில், தனது மகள் லூா்துமேரி உடன் வசித்து வருகிறாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வீட்டின் மேற்கூரையில் இருந்து தீப்பிடித்து எரிவதை கண்டு அக்கம் பக்கத்தினா் ஆத்தூா் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். அவா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா்.

அதற்குள்ளாக வீடு முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. இதில் வீட்டிற்குள் இருந்த வீட்டு உபயோகப் பொருள்கள், துணிகள் மற்றும் லூா்து மேரியின் படிப்பு சான்றிதழ் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்தது.

முன்னதாக கீதாவும் அவரது மகள் லூா்துமேரி இருவரும் இரவு நேரத்தில் அருகில் உள்ள உறவினா் வீட்டிற்குச் சென்று விட்டதால், இந்த விபத்தில் இருந்து அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என ஆத்தூா் தீயணைப்பு துறையினா் தெரிவித்தனா். இந்த விபத்து குறித்து செம்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT