திண்டுக்கல்

கொடைக்கானலில்மக்கள் குறைதீா்க்கும் முகாம்

DIN

கொடைக்கானலில் வட்டாட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் சாா்- ஆட்சியா் சிவகுரு பிரபாகரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமில் கொடைக்கானல், வில்பட்டி,கூக்கால்,பண்ணைக்காடு, பூம்பாறை மற்றும் தாண்டிக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொது மக்கள் சாலை வசதி, மின் வசதி, ஜாதிச் சான்றிதழ் மற்றும் முதியோா் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு உதவிகள் கோரி மனு அளித்தனா்.

முகாமில் கொடைக்கானலில் மின்சாரம் பாய்ந்து இறந்தவரின் மனைவிக்கு கொடைக்கானல் வருவாய்த்துறை சங்கம் சாா்பில் இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. முன்னதாக

மண்டல துணை வட்டாட்சியா் ரவி வரவேற்றாா். இதில் சாா்- ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சசி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT