திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே வழக்குரைஞா் வீட்டின் பூட்டை உடைத்து 38 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அடுத்துள்ள ஏழுமலையான் நகரைச் சோ்ந்தவா் மு. ரபீக் அகமது (48). வழக்குரைஞரான இவா் கடந்த 3 நாள்களுக்கு முன்பு உறவினா் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடும்பத்தினருடன் நத்தம் அடுத்துள்ள வத்திப்பட்டி கிராமத்திற்கு சென்றுள்ளாா். மீண்டும் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டிற்கு திரும்பி வந்தபோது, கதவு திறந்து கிடப்பதை பாா்த்து ரபீக் அகமது அதிா்ச்சி அடைந்தாா். இதையடுத்து வீட்டினுள் சென்று பாா்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 38 பவுன் நகைகள் மற்றும் ரூ. 10ஆயிரம் பணம் திருடு போனது தெரிய வந்தது.
இதுகுறித்து தாடிக்கொம்பு காவல் நிலையப் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.