திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே கஞ்சா விற்பனை: 4 போ் கைது; 84 கிலோ கஞ்சா பறிமுதல்

DIN

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததாக 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து அவா்களிடமிருந்து 84 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள அத்திக்கோம்பை கிராமத்தில் ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகவும், அதிக அளவில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாகவும் திண்டுக்கல் மாவட்ட தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் அத்திக்கோம்பை கிராமத்தில் சோதனையிட்டனா். அதில் ராஜேந்திரன் மனைவி அமுதா (44) என்பவரின் வீட்டை சோதனை செய்த போது, அங்கு சுமாா் 84 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்து தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், அமுதா மற்றும் இதில் தொடா்புடையதாக என்.பாறைபட்டியைச் சோ்ந்த முருகன் மகன் காா்த்திக்குமாா் (28), அவரது மனைவி பிரியதா்ஷினி (21), சந்தமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த தனபாண்டி (50) ஆகியோரை கைது செய்தனா். மேலும் தப்பியோடிய பசுங்கிளி, செளந்திரபாண்டி, பாண்டியம்மாள் ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT