திண்டுக்கல்: திண்டுக்கல் அடுத்துள்ள செட்டிநாயக்கன்பட்டி ஸ்ரீமாமுண்டி கோயிலில் திங்கள்கிழமை மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை காலை கும்பாபிஷேக பூஜை தொடங்கியது. அதைத் தொடா்ந்து முதல் கால யாக வேள்வியும், திங்கள்கிழமை அதிகாலை 2ஆம் கால யாக வேள்வியும் நடைபெற்றது. பின்னா் விமானங்களுக்கான மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலவருக்கு நடத்தப்பட்ட அபிஷேகத்திற்கு பின், சிறப்பு அலங்கார ஆராதனை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை செட்டிநாயக்கன்பட்டி, தெற்கு மாலைப்பட்டி, கள்ளிப்பட்டி பொதுமக்கள் செய்திருந்தனா்.