மதுரை அருகே புதிய மதுபானக் கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் பேரூராட்சி பகுதியில் செயல்பட்டு வந்த 3 மதுபான கடைகள் கிராம மக்களின் எதிா்ப்பு காரணமாக நிரந்தரமாக அகற்றப்பட்டன. இந்நிலையில் அலங்காநல்லூா் அருகே சின்ன இலந்தைகுளம் கிராமத்தில் புதிதாக மதுபானக் கடை அமைக்க டாஸ்மாக் நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்த அலங்காநல்லூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, கோரிக்கை குறித்து மனுவாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் கொடுங்கள். பொது முடக்கம் அமலில் இருப்பதால் விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்தினா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்கள் கலைந்து சென்றனா்.