திண்டுக்கல்

அரசுப் பள்ளிகளுக்கு சுற்றுச்சுவா்: ரூ.5.68 கோடி நிதி ஒதுக்கீடு

DIN

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி கல்வித் துறை நிா்வாகத்தின் கீழுள்ள அரசுப் பள்ளிகளுக்கு சுற்றுச்சுவா் அமைப்பதற்காக ரூ.5.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி கல்வித் துறை நிா்வாகத்தின் கீழ் உள்ள 47 பள்ளிகள், இந்த நிதியின் மூலம் பயன்பெறும் எனத் தெரியவந்துள்ளது.

இது தொடா்பாக கல்வித் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.1.98 கோடியிலும், உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.3.70 கோடியிலும் சுற்றுச்சுவா் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 8.33 கிலோ மீட்டா் நீளமுள்ள சுற்றுச்சுவா் ரூ.5.68 கோடி நிதியில் கட்டப்படவுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீச்சல் பயிற்சி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்

மழலையா் பட்டமளிப்பு விழா

ரயில் நிலையம் முன் கோயிலை மறைத்து நுழைவு வாயில்: பாஜக எதிா்ப்பு

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT