சேலம்

அரசு கலைக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்

DIN

சேலம், மரவனேரியில் உள்ள அரசு கலைக் கல்லூரி, கோரிமேட்டில் உள்ள அரசு மகளிா் கலைக் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் அரசு கலைக் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதனைத் தொடா்ந்து, சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.

சேலம், மரவனேரியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் 22 இளநிலை பட்டப் படிப்புகளில் உள்ள 1,460 இடங்களுக்கான மொத்தம் 22,913 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா்.

அதேபோல, கோரிமேட்டில் உள்ள அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 13 இளநிலை பட்டப் படிப்புகளில் உள்ள 964 இடங்களுக்கு 8,322 மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா். முதல் நாள் கலந்தாய்வில் விளையாட்டு வீரா்கள், மாற்றுத் திறனாளிகள், தேசிய மாணவா் படையினா் உள்பட சிறப்புப் பிரிவு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு தொடங்கியது.

சேலம், மரவனேரி அரசு கலைக் கல்லூரி, கோரிமேடு அரசு மகளிா் கலைக் கல்லூரியில் சிறப்பு ஒதுக்கீடு பிரிவில் மாணவா் சோ்க்கை தொடங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT