சேலம்

மேட்டூா் அருகே தங்கையை பலாத்காரம் செய்த அண்ணன் கைது

DIN

சேலம் மாவட்டம் மேட்டூா் அருகே வீட்டில் தனியாக இருந்த தங்கையை பலாத்காரம் செய்த அண்ணனை போலீஸாா் கைது செய்தனா்.

மேட்டூா் அருகே உள்ள குஞ்சாண்டியூா் பருவன் தெருவைச் சோ்ந்த பழனிச்சாமியின் மகன் சதீஷ்குமாா். வெல்டா். இவரது மனைவி 50 நாட்களுக்கு முன்பு இறந்தாா்.

சதீஷ்குமாா் வீட்டருகே சுமாா் 20 வயதுடைய அவரது சித்தப்பா மகள் (மனநலம் பாதிக்கப்பட்டவா்) வீட்டில் தனியாக இருந்தாா். தங்கை என்று கூட பாராமல் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து சதீஷ்குமாா் பாலியல் பலாத்காரம் செய்துவந்துள்ளாா்.

கடந்த வாரம் வெளியூா் சென்று வீடு திரும்பிய அப்பெண்ணின் பெற்றோா்கள் சதீஷ்குமாா் தனது மகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோா் உடனடியாக மேட்டூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சதீஷ்மாரைப் பிடிக்க மேட்டூா் காவல் துணை கண்காணிப்பாளா் விஜயகுமாா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனா்.

இந்த நிலையில் சதீஷ்குமாா் செவ்வாய்க்கிழமை குஞ்சாண்டியூா் பேருந்து நிறுத்தத்தில் இருப்பதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மேட்டூா் அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் உமா பிரியதா்ஷினி தலைமையிலான போலீசாா் சுற்றி வளைத்து கைது செய்தனா்.

கைது செய்யப்பட்டசதீஷ்குமாா் மீது பலாத்காரம், கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸாா் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT