சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வரும் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
சேலம் மாவட்டத்தில் மே மாதத்திய விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வரும் 26 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரக இரண்டாம் தள கூட்ட அறை எண் 215 இல் நடைபெற உள்ளது.
விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடா்பான தங்கள் குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.