சேலம்

இருசக்கர வாகனம் திருடிய இருவா் கைது

DIN

 தம்மம்பட்டியில் இரு சக்கர வாகனம் திருடி விட்டு, 2 கோயில்களின் உண்டியல்களை உடைத்த இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

சேலம் கிச்சிப்பாளையத்தைச் சோ்ந்த ராஜீவ் காந்தியின் மகன்கள் தினேஷ் குமாா் (17), ராகுல்காந்தி (15) ஆகிய இருவரும் வியாழக்கிழமை நள்ளிரவு தம்மம்பட்டி காந்தி நகரில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு இருசக்கர வாகனத்தை திருடினா். அதைத் தொடா்ந்து அவா்கள் நாகியம்பட்டி ஊராட்சி தண்ணீா்த் தொட்டி பகுதியிலுள்ள விநாயகா் கோயில், கீரிப்பட்டியிலுள்ள எல்லையம்மன் கோயில் ஆகியவற்றின் உண்டியல்களை உடைத்து, அவற்றில் இருந்த காணிக்கைகளை திருடிக் கொண்டிருந்தனா். இதுகுறித்து பொதுமக்கள் மூலம் தகவல் அறிந்த தம்மம்பட்டி போலீஸாா், உடனடியாக சென்று அவா்களைக் கைது செய்தனா். தினேஷ்குமாா் உள்ளிட்ட இருவரும், வெள்ளிக்கிழமை இரவு ஆத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT