சேலம் மாவட்டம் மேச்சேரியில் செம்மண் கடத்தி வந்த டிப்பா் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
மேட்டூா் அருகே உள்ள மேச்சேரியில் செம்மண் கடத்தப்படுவதாக சேலம் கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. வெள்ளிக்கிழமை அதிகாலை மேச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே கனிமவள தனிவருவாய் ஆய்வாளா் பிரசாத் தலைமையில் அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது தொப்பையாறு பக்கமிருந்து வேகமாக வந்த டிப்பா் லாரியை அதிகாரிகள் நிறுத்தினாா்கள். லாரியை நிறுத்திய ஓட்டுநா் கீழே குதித்து தப்பி ஓடினாா். அந்த லாரியை சோதனை செய்தபோது அதில் மூன்று யூனிட் செம்மண் கடத்தப்பட்டது தெரியவந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் மேச்சேரி போலீஸாாரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து மேச்சேரி போலீஸாாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.