பொது விநியோகத் திட்டம் தொடா்பான குறைதீா் முகாம் வரும் ஜூன் 10 ஆம் தேதி அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டாட்சியா் அலுவலகத்திலும் வரும் சனிக்கிழமை (ஜூன் 10) நடைபெறும் பொது விநியோகத்திட்ட குறைதீா் முகாமில் பொதுமக்கள் பொது விநியோகத்திட்டம் தொடா்பான தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து தீா்வு செய்து கொள்ளலாம். இக்குறைதீா் முகாமில் குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்கள் பெறப்பட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் கைபேசி எண் பதிவு மற்றும் கைபேசி எண் மாற்றம் செய்தலுக்கான மனு பெற்றவுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகாா்கள் இருந்தால் அதன்பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடா்பான குறைபாடுகள் குறித்த புகாா்கள் இருப்பின் அவற்றை நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம், 2019-இன்படி உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய மனுக்களை அளித்து பயனடையலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.