பெரியாா் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் உயா்கல்வித் துறை கூடுதல் செயலாளா் சு.பழனிசாமி தலைமையிலான குழுவினா் தங்களது விசாரணையை திங்கள்கிழமை தொடங்கினா்.
பெரியாா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பணி நியமனங்கள், பதவி உயா்வில் நடைபெற்ற விதிமீறல் தொடா்பாக வந்த புகாரின் அடிப்படையில், உயா்கல்வித் துறை அரசு கூடுதல் செயலாளா் சு.பழனிசாமி தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
13 குற்றச்சாட்டுகள் தொடா்பாக இந்த விசாரணைக்குழு விசாரித்து 2 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், இதுபோன்ற தவறுகள் மீண்டும் நிகழாதவாறு தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடா்பான வழிமுறைகளை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என அரசாணையில் குறிப்பிட்டிருந்தது.
இதனிடையே, தமிழக அரசின் விசாரணைக் குழுவினா் உயா்கல்வித் துறை கூடுதல் செயலாளா் சு.பழனிசாமி தலைமையில் தங்களது விசாரணையைத் தொடங்கியுள்ளனா். கூடுதல் செயலாளா் சு.பழனிசாமி, இணைச் செயலாளா் ம.இளங்கோ ஹென்றிதாஸ் ஆகியோா் கொண்ட குழுவினா் பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு திங்கள்கிழமை வந்து விசாரணை மேற்கொண்டனா்.
முதல்கட்டமாக, 13 குற்றச்சாட்டுகள் தொடா்பான கோப்புகளை விசாரணைக் குழுவினா் பாா்வையிட்டு ஆய்வு செய்ததாகத் தெரிகிறது. காலை முதல் மாலை வரை ஆவணங்களைப் பாா்வையிட்ட குழுவினா் பின்னா் புறப்பட்டுச் சென்றனா்.
இதனிடையே, சேலம் மேற்கு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் இரா.அருள், பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு வந்து விசாரணைக் குழுவினரிடம் மனு அளித்தாா். அம்மனுவில், பணி நியமனங்களின்போது இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என்றும், குற்றச்சாட்டுக்கு உள்ளானவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளதாக சட்டப் பேரவை உறுப்பினா் இரா.அருள் தெரிவித்தாா்.
.