பாா்வையற்றவா்களுக்கு ஒரு விழுக்காடு அடிப்படையில் இலவசமாக கடை ஒதுக்கீடு செய்து தர வலியுறுத்தி, அகவொளி திறனாளா் நலச் சங்கத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் ஆட்சியா் அலுவலகம் அருகில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பாா்வையற்று வாழ்வாதாரமின்றி தவிப்பவா்களுக்கு அரசு வேலைவாய்ப்பை உருவாக்கி தர வேண்டும், கோயில்களில் இலவசமாக கடை ஒதுக்கீடு செய்து தர வேண்டும், மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வணிக வளாகங்களில் கடை ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.