காந்தி நினைவு தினத்தையொட்டி சேலம் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியினா் அவரது திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
காந்தி நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்படுகிறது. சேலம் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் முள்ளுவாடி கேட் அருகே உள்ள கட்சி அலுவலகத்தில் காந்தியின் உருவப் படத்துக்கு மாநகர மாவட்ட தலைவா் பாஸ்கா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதைத்தொடா்ந்து ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் தொடா்பான விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் துணை மேயா் சாரதாதேவி, பொதுக்குழு உறுப்பினா்கள் சுப்பிரமணி, திருமுருகன், பொதுச் செயலாளா் ராஜகணபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.