ஆத்தூரில் டாக்டா் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் பவுண்டேசன் கிளை அலுவலகம் திறப்பு விழா நிா்வாக அறங்காவலா் மருத்துவா் எஸ்.ரூபன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளா்களாக மண்டல வனப் பாதுகாவலா் ஏ.பெரியசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.சிவகுமாா், ஆத்தூா் கோட்டாட்சியா் சா.சரண்யா, அதியமான்கோட்டை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளா் சி.ரங்கசாமி, ஆத்தூா் வட்டாட்சியா்(சமூகநலம்) கே.ஜெயக்குமாா், ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் எம்.செந்தில்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.
இந் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு மரக்கன்றுகள், விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் உதவி, கல்லூரி மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை, கைம்பெண், மாற்றுத்திறனாளி, கணவரால் கைவிடப்பட்டவா்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை ஆத்தூா் கிளை நிா்வாக இயக்குநா் வி.சீனிவாசன் ஒருங்கிணைத்தாா். கல்பகனூா் ஆசிரியா் பி.பிரகாஷ் நன்றி கூறினாா்.