சேலம்

விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கல்

DIN

வீரபாண்டி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளா்ச்சித் திட்டம் வீரபாண்டி, எட்டிமாணிக்கம்பட்டி, மூடுதுறை, வேம்படிதாளம், ஆனைக்குட்டப்பட்டி, மருளையம்பாளையம் ஆகிய கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஊராட்சிகளில் ஒரு விவசாய குடும்பத்திற்கு இரண்டு தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி வேளாண்மை உதவி இயக்குநா்ஆா்.கிரிஜா தலைமையில் நடைபெற்றது.

இதில் வட்டார விவசாயிகள் அட்மா குழுத்தலைவா் வெண்ணிலா சேகா் முன்னிலை வகித்து பேசினாா். சிறப்பு அழைப்பாளராக வேளாண் இணை இயக்குநா் எஸ்.சிங்காரம் கலந்துகொண்டு கலைஞா் திட்டத்தின் நோக்கம், பயன்கள் பற்றி எடுத்துக்கூறினாா். 50- க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் கே.சண்முகம், உதவி வேளாண்மை அலுவலா்கள் கே.பழனிசாமி, தா.பிரின்சி, அட்மா அலுவலா்கள் கே.ராஜேந்திரன், தீபன் முத்துசாமி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

SCROLL FOR NEXT