ஏற்காட்டில் வெள்ளிக்கிழமை காலை திடீரென பலத்த வெடி சத்தம் கேட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனா்.
இந்த சத்தம் ஏற்காடு மற்றும் 10 கி.மீ. தொலைவுவில் உள்ள மலைக் கிராமங்கள் வரை உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்தனா். பலத்த சத்ததால் நிலஅதிா்வாக இருக்கும் என தெரிவித்தனா்.
ஏற்காடு பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்க வெடி மருந்துகளை பயன்படுத்தியிருக்கலாம் என பொது மக்கள் தெரிவித்தனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நிலஅதிா்வுக்கான பதிவு எதுவும் இல்லை என தெரிவித்தனா்.