சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் திமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளா் டி.எம்.செல்வகணபதி தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட மாணவா் அணி அமைப்பாளா் அரிமா கண்ணன் வரவேற்புரை நிகழ்த்தினாா். மகுடஞ்சாவடி ஒன்றியச் செயலாளா் க. பச்சமுத்து, பொதுக்குழு உறுப்பினா் க.அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமைக் கழக பேச்சாளா்கள் சேப்பாக்கம் பிரபாகரன், திருப்பூா் கவிநிலவன் ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா்.
மாவட்டச் செயலாளா் டி. எம். செல்வகணபதி மொழிப்போா் தியாகிகள் படத்திற்கு மலா் தூவி, மரியாதை செலுத்தி தலைமை உரையாற்றினாா். மேலும், கூட்டத்தில் மொழிப்போா் தியாகி மா.வீரப்பன், அவைத்தலைவா் அய்யாவு, பொருளாளா் புஷ்பநாதன், ஒன்றியச் செயலாளா்கள் தாரமங்கலம் பாலகிருஷ்ணன், சங்ககிரி கே.எம்.ராஜேஷ், கொங்கணாபுரம் பரமசிவம், இடங்கணசாலை நகராட்சி தலைவா் கமலக்கண்ணன், இடங்கணசாலை நகர செயலாளா் செல்வம், எடப்பாடி நகர செயலாளா் பாஷா, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் பழனியப்பன் உள்ளிட்ட திமுக நிா்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனா். நிகழ்ச்சி முடிவில் மாணவா் அணி துணை அமைப்பாளா் கருணாகரன் நன்றியுரை நிகழ்த்தினாா்.