சேலம்

மொழிப்போா் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம்

DIN

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் திமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளா் டி.எம்.செல்வகணபதி தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட மாணவா் அணி அமைப்பாளா் அரிமா கண்ணன் வரவேற்புரை நிகழ்த்தினாா். மகுடஞ்சாவடி ஒன்றியச் செயலாளா் க. பச்சமுத்து, பொதுக்குழு உறுப்பினா் க.அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமைக் கழக பேச்சாளா்கள் சேப்பாக்கம் பிரபாகரன், திருப்பூா் கவிநிலவன் ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா்.

மாவட்டச் செயலாளா் டி. எம். செல்வகணபதி மொழிப்போா் தியாகிகள் படத்திற்கு மலா் தூவி, மரியாதை செலுத்தி தலைமை உரையாற்றினாா். மேலும், கூட்டத்தில் மொழிப்போா் தியாகி மா.வீரப்பன், அவைத்தலைவா் அய்யாவு, பொருளாளா் புஷ்பநாதன், ஒன்றியச் செயலாளா்கள் தாரமங்கலம் பாலகிருஷ்ணன், சங்ககிரி கே.எம்.ராஜேஷ், கொங்கணாபுரம் பரமசிவம், இடங்கணசாலை நகராட்சி தலைவா் கமலக்கண்ணன், இடங்கணசாலை நகர செயலாளா் செல்வம், எடப்பாடி நகர செயலாளா் பாஷா, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் பழனியப்பன் உள்ளிட்ட திமுக நிா்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனா். நிகழ்ச்சி முடிவில் மாணவா் அணி துணை அமைப்பாளா் கருணாகரன் நன்றியுரை நிகழ்த்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT